
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் வீடியோ ஒன்று, மனதை பெரிதும் பாதிக்கிறது. வீடியோவில், ஒருவர் சாலையில் அமைதியாக சென்ற ஒரு நாய்க்குட்டியை காலால் எட்டி மிதித்து, பின்னர் தூக்கி வீசி துன்புறுத்தியுள்ளார்.
இந்தக் காட்சியை பார்த்த வாலிபர், அந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட நபரிடம் சென்று கடும் கேள்வி கேட்டு, அவரை கடுமையாக தாக்கினார். இதுபோன்ற மனிதாபிமானத்தற்ற செயல்கள் சமூகத்தில் எவ்வளவு கோபத்தை எழுப்புகின்றன என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது.
Kalesh b/w a Uncle and Guy over beating a Puppy
pic.twitter.com/yOu8phreqE— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 27, 2025
இந்த வீடியோ “@gharkekalesh” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பலரும் தங்களுடைய கோபத்தையும் ஆதரவையும் கருத்துகளாக பதிவு செய்து வருகின்றனர்.
“இப்படி செய்பவங்களைத் திருத்திவைக்க எப்போதுமே இந்த மாதிரியான தைரியசாலிகள் இருக்க வேண்டும்” என ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். மற்றொருவர் “இந்த நபர் மனிதாபிமானம் என்னவென்று அறியாதவன்” எனக் கூறியிருக்கிறார். மேலும், “விலங்குகளிடம் கூட அன்போடு நடந்து கொள்வது தான் உண்மையான மனிதத்துவம்” என்பதையும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
தெருவோர நாய்கள் குறித்த கொடுமைகள் தொடர்ந்து சமூகங்களில் அதிகரித்து வருவதால், இதுபோன்ற சம்பவங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.