
கர்நாடக மாநிலத்தில் விஜய் என்பவர் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்வேதா (23) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இதில் ஸ்வேதா திருமணமானவர். சமீபத்தில் விவாகரத்து ஆகிவிட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்த விஜய் மற்றும் ஸ்வேதா இருவரும் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் திடீரென ஸ்வேதா கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை நான் மட்டும்தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு நான் செய்து விசாரணை நடத்தியதில் விஜய் முதலில் திருமணம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்துவிட்டு பின்னர் பின்வாங்கியுள்ளார். இதன் காரணமாகத்தான் ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.