
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் பகுதியில் காளீஸ்வரி என்ற 32 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 8 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்க்கிறார். இதனால் காளீஸ்வரி தன் மகனுடன் தனியாக வசித்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு 17 வயது சிறுவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த சிறுவன் களக்காடு அருகே உள்ள ஒரு பகுதியில் பன்றி பண்ணையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த சிறுவன் பள்ளி படிப்பை படித்த நிலையில் மேற்கொண்டு படிக்கவில்லை. இதன் காரணமாக வேலை முடிந்து பிற நேரங்களில் காளீஸ்வரியுடன் நேரத்தை செலவிட்டார். இந்த சிறுவன் instaவில் ஆபாச பதிவுகளை போட்ட நிலையில் அதனை ரசித்து காளீஸ்வரி கிண்டலாக பதிவு வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இவர்கள் பழகி வந்த நிலையில் அந்த சிறுவனை தன்னுடன் வைத்திருக்க விரும்பிய அந்த பெண் இரவு பகலாக அந்த சிறுவனுடன் இனிக்க இனிக்க பேசி ஆசை வார்த்தைகளை வளர்த்தார்.
அதன்பிறகு அந்த பன்றி பண்ணையில் வைத்து யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனை அடிக்கடி காளீஸ்வரி தான் விரும்பும் நேரத்தில் எல்லாம் அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதன் உச்சகட்டமாக கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த சிறுவனை அந்த பெண் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவனுக்கு தெரியவந்த நிலையில் அவர் தன் மனைவியை தொடர்பு கொண்ட போது சிறுவன் போனை எடுத்துப் பேசி நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ போகிறோம் எங்களை தொந்தரவு செய்தால் உங்கள் மகனை கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து சிறுவனின் தாயாருக்கும் தெரிய வந்த நிலையில் அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அவர்கள் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அந்தப் பெண்ணை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்த நிலையில் குழந்தையை கணவனிடம் ஒப்படைத்தனர். மேலும் 17 வயது சிறுவனுடன் அந்த பெண் குடும்பம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.