
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியிடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பிப்ரவரி 3ஆம் முதல் 5-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்ரவரி 8-ம் தேதியும் விடுமுறை. இதனால் மொத்தமாக டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.