தமிழகத்தில் பழங்குடி கைவினர்கள் குழு திருவிழா நடத்தப்படும் என்று இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான ட்ரைபெட் அறிவித்துள்ளது. கைவினை திறனுக்கான திறமை வாய்ந்த பழங்குடி கைவினைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று தொடங்கி ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தின் கோத்தகிரி, உதகமண்டலம், ஏற்காடு, கொல்லிமலை போன்ற இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளபன்முக பின்னணிகளை கொண்ட பழங்குடி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.