
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிக புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு வலு குறைந்து நாளை மறுநாள் நவம்பர் 30-ஆம் தேதி காரைக்கால் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
நேற்று மாலையே பெங்கல் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. வருகிற 30-ஆம் தேதி சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.