
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஃபெடரல் வங்கியில், அசோசியேட் ஆபீசர் (விற்பனை) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
விண்ணப்பதாரர்கள் எந்தவொரு பாடப்பிரிவிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டம் முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, மற்றும் பட்டப்படிப்பு ஆகியவை அவசியம்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4.59 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.6.19 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, தேசிய ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீடு, பணிக்கொடை, வட்டி விகிதத்தில் கடனுதவி உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டு தளர்வும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டு தளர்வும் வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள், கணினி வழி ஆப்டிடியூட் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு மையங்கள் தமிழ்நாட்டில் – சென்னை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
விருப்பமுள்ளவர்கள் https://www.federalbank.co.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.350 ஆகும். விண்ணப்பிக்க தொடக்க தேதி: 10.06.2025; கடைசி தேதி: 22.06.2025 ஆகும்.