இந்த கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே கடைசியாக 2023 ஆம் வருடம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது உள்ள தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரஹானே மிகுந்த வருத்தத்துடன் பேசியதாவது,” சில வருடங்களுக்கு முன்பாக நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டேன். ஆனாலும் மீண்டும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போதும் ஏன் திடீரென்று என்னை அணியில் இருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை. மூத்த வீரராக எனக்கு இன்னும் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் திடீரென விலக்கி விட்டார்கள். இது குறித்து யாரிடமும் நான் எதுவும் கேட்கப் போவதே கிடையாது. அப்படிப்பட்ட ஆளும் நான் கிடையாது.

எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும், ஆர்வமும் மிஞ்சி இருக்கிறது. அதனால் தான் தற்போது ரஞ்சி தொடரில் மிக சிறப்பாக விளையாடிய வருகிறேன். மும்பை அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். நிச்சயம் இதன் மூலம் என்னால் இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.