கார்டு இல்லாமல் கியூ ஆர் கோடை பயன்படுத்தி பணம் எடுக்கும் வகையில் ஏடிஎம் எந்திரங்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட யுபிஐ செயல்களில் சில மாற்றங்களை செய்யவும் முடிவு செய்துள்ளது. அதன்படி ஓராண்டுக்கு மேலாக செயல்படாத யுபிஐ ஐடிகளை முடக்கவும், பணம் செலுத்தும் போது பெறுபவரின் வங்கி கணக்கில் உள்ள உண்மையான பெயரை திரையில் காட்டும் வசதியும் அறிமுகம் செய்ய உள்ளது.