திருப்பதி தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, திருப்பதியில் தரிசன டிக்கெட் உடன் வரும் பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப லட்டு வழங்கப்படும். அதன்படி இன்று முதல் பக்தர்கள் தங்களுடைய தேவைக்கேற்ப எத்தனை லட்டுக்களை வேண்டுமானாலும் வாங்கி செல்லலாம். ஒரு லட்டுவின் விலை ரூ‌.50 ஆகும். அதன் பிறகு சாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையில் இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.

இதுவரை அன்லிமிடெட் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பாலிசியை தேவஸ்தானம் கவனிக்காமல் விட்டுவிட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் நிலையில் கட்டுப்பாடுடன்  லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பக்தர்களின் தேவைக்கேற்ப எத்தனை லட்டுக்களை வேண்டுமானாலும் வாங்கி செல்லலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.