ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியக வளாகம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை வாரத்தில் 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி, ஜூன் 1 முதல் திங்கள் தவிர வாரத்தில் மீதமுள்ள 6 நாட்கள் பார்வையிடலாம் என்றும் பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையும் தலா ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் மக்கள் கண்டு களியுங்கள்.