சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது.  இந்நிலையில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அரவண பிரசாதம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

இனி ஒவ்வொரு பக்தருக்கும் 2 பெட்டிகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசாத பெட்டிகள் தட்டுப்பாடு மற்றும் மகர ஜோதியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு ஐயப்ப பக்தர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.