தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நிலையில் தற்போது அதையெல்லாம் உதறி தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். சமீபத்தில் நடந்த முதல் மாநாட்டின் போது பணம் சம்பாதித்து என்ன செய்யப் போகிறோம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளதாக விஜய் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் அதன் பிறகு கட்சியின் கொடி போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நடிகர் விஜய் கலர் கலராக சட்டைகள் அணிந்து கொள்வார். ஆனால் அவர் அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு தற்போது எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் வெள்ளை நிற சட்டையில் மட்டும் தான் கலந்து கொள்கிறார்.

அவர் வெள்ளை நிற சட்டை மற்றும் சாண்டல் கலர் பேண்ட் அணிந்து கலந்து கொள்கிறார். குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு, அதன் பிறகு நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம், விவசாயிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி என அனைத்திலும் வெள்ளை நிற சட்டையில் கலந்து கொண்டார். முன்னதாக மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சிகளும் வெள்ளை நிற சட்டை அணிந்த விஜய், பெரியாருக்கு மரியாதை செலுத்த சென்றபோதும் வெள்ளை நிற சட்டை அணிந்து சென்றார். அதோடு படப்பிடிப்பு தளங்களில் கலந்து கொள்ளும்போது விஜய் பற்றிய போட்டோக்கள் வீடியோக்கள் வெளியாகும் நிலையில் அதில் கூட அவர் வெள்ளை நிற சட்டை அணிந்துதான் வலம் வருகிறார்.

தற்போது நடிகர் விஜய் எங்கு சென்றாலும் வெள்ளை நிற சட்டையில்  செல்வது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை தற்போது ஆவேசம் திரைப்படத்தில் பகத் பாஸில் வெள்ளை நிற சட்டங்களை தன்னுடைய அலமாரி முழுவதும் வைத்திருக்கும் வீடியோவை வைத்து விஜய் வீட்டில் தற்போது வெள்ளை நிற சட்டைகள் மட்டும்தான் இருப்பதாக வீடியோவை எடிட் செய்து இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் வெள்ளை நிற சட்டையில் தற்போது முழு நேர அரசியல்வாதியாகவே நடிகர் விஜய் வலம் வருகிறார் என்பதை உணர்த்தும் விதமாக இந்த வீடியோவை வைரல் ஆக்குகிறார்கள்.