தமிழகத்தில் பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு இனி அரசு பணி வழங்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். அனைத்து துறையிலும் கருணை அடிப்படையில் பணி வழங்குவதைப் போல மருத்துவ துறையிலும் பணி வழங்கப்படுவதாக தெரிவித்தார். இறந்து மூன்று ஆண்டுகளுக்குள் பதிவு செய்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய மூன்று பணிகளில் ஒற்றை வாரிசுகளுக்கு வழங்க முடியும் என கூறினார்