ஆதார் கார்டு வாங்குவதற்கு கட்டாயம் பிறப்பு சான்றிதழ் அவசியம். இந்த நிலையில் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று தகவல் வெளியானது. அரசு பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு சார்ந்த அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பள்ளி ஆவணங்கள், ஆதார் அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தீயாய் தகவல் பரவி வந்தது.

எனவே மூத்த குடிமக்கள் உட்பட பொதுமக்கள் பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்ய, பெயரில் மாற்றங்களை செய்ய 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி தான் கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்ததாகவும் குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக கணக்கான பத்திரிக்கை அலுவலக தகவல் சரி பார்ப்பு  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க 2026 வருடம் ஏப்ரல் 27 கடைசி தேதி என்று மத்திய அரசு அறிவித்ததாக பரவிய தகவல் தவறானது. பிறப்பு சான்றிதழ் தொடர்பாக இது போன்ற எந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை என்று கூறியுள்ளது.