
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணமாக காட்டி ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முழுமையான தடை விதித்துள்ளார். கொலராடோவில் அண்மையில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை அதிகம் பேசத் தொடங்கிய நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். இந்நிலையில் மொத்தம் 12 நாடுகளை சேர்ந்த நாடுகளுக்கு அமெரிக்காவில் வருவதற்கு தற்போது டிரம்ப் தடை விதித்துள்ளார்.
அதன்படி ஆப்கானிஸ்தான், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, மியான்மர், சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வெள்ளை மாளிகையின் விளக்கத்தின்படி, இந்தத் தீர்மானம் அமெரிக்கா மீது வெளிநாட்டிலிருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்குத் தடையாக செயல்படும்.
அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவில், கொலராடோவில் சமீபத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக, ஒரு எகிப்திய குடிமகன் பாலஸ்தீனத்தை ஆதரித்து நடக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னர், வெளிநாட்டிலிருந்து வரும் பயங்கரவாத அபாயங்களை முன்வைத்து டொனால்ட் டிரம்ப் இந்த முழுமையான தடையை அறிவித்துள்ளார். மேலும் நாட்டின் மக்களை பாதுகாப்பது தான் முக்கிய நோக்கமாகும் என்றும், பாதுகாப்பு முன்னேற்றங்கள் ஏற்படுமாயின் தடைகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.