தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் திரிஷா மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்திருந்த நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் லியோ படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக எனக்கு அமைந்தது என்று நடிகை மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த படத்தில் நடிப்பது குறித்து என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் தகவல் கசிந்தது. லோகேஷ் எங்கள் அனைவரையும் வேறு உலகத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். மேலும் அர்ஜுனை பார்ப்பதற்கே பயமாக இருக்கும் என்று மடோனா தெரிவித்துள்ளார்.