நடிகர் ராஷ்மிகா மந்தனா திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தற்போது  அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.  இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான சிக்கந்தர் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை அடுத்து தனுஷுக்கு ஜோடியாக குபேரா படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தெலுங்கானா அரசை விமர்சிக்கும் விதமாக இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் தெலுங்கானாவில் 400 ஏக்கர் காட்டின் நிலத்தை அழித்து  தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து மாணவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அரசின் இந்த முடிவை கண்டிக்கும் விதமாக ராஷ்மிகா   தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில் இந்த செய்தியை பார்த்து மனம் உடைந்து போனதாகவும் ,இந்த முடிவு மிகவும் தவறு” என்றும் கூறியுள்ளார்.