காந்தியின் வாசகம் இருந்தால் எப்படி இருக்கும்? என ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாவில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த மாதம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு சென்றதில் மகிழ்ச்சி அடைந்தேன். ஐ.நா தலைமையகத்தில் நிறைய நாடுகளின் குறியீடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, இந்தியாவின் அமைதி சின்னம் காந்தியின் ‘கண்ணுக்கு கண் என்றால், இந்த உலகமே குருடாகிவிடும்’ என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? என தோன்றியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.