
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதன் பிறகு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து அழித்தது.
இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தாக்குதல் நிறுத்த பேச்சு வார்த்தையை நடத்திய ராணுவ நடவடிக்கை இயக்குனர் ராஜீவ் காய், தற்போது ராணுவத்தின் துணை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவ உத்திகளை நிர்வகிப்பது இவரது பொறுப்பாகும். மேலும் ராணுவ நடவடிக்கை இயக்குனர் பொறுப்பிலும் அவர் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.