தேசிய கல்விக் கொள்கைக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடுகின்றனர். இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாக கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என கூறினார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்வி கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்கிறோம். இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணிகட்டி அனுப்புவதுதான் தேசிய கல்வி கொள்கை என்கிறோம் என பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.