பிரபல சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி. இவர் கிட்டதட்ட 40 வருடங்களுக்கு மேலாக சுசுகி நிறுவனத்தை வழி நடத்திய நிலையில் அதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா வரை விரிவாக்கம் செய்தவர். இவர் நடுத்தர மக்களுக்காக maruti 800 வாகனத்தை உருவாக்கிய நிலையில் அது மிகவும் பிரபலமாக இருந்தது.

இவர் லிம்போமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று  காலமானதாக குடும்பத்தினர் அறிவித்தனர். மேலும் இவருக்கு 94 வயது ஆகும் நிலையில் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்தவகையில்   மறைவுக்கு தற்போது பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உலக அளவில் வாகனதுறையில் புகழ்பெற்ற ஒசாமு சுசுகி விளங்கினார்.‌ இவருடைய மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இவர் இந்தியா மீது அதிக பாசம் கொண்டிருந்தார். மாருதி உடன் அவருடைய ஒத்துழைப்பு இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும் அவருடைய மறைவால் வாழும் குடும்பத்தினருக்கும் எண்ணற்றவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.