ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த தாக்குதலை இந்தியா முறியடித்தது அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஜம்மு அருகே சம்பாவில் பாகிஸ்தான் இரண்டாவது நாளாக அத்துமீறி உள்ளது. இன்றும் பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியை தொடங்கியுள்ளதால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அந்த தாக்குதலை முறியடித்தது.

இந்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.