இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள 533 கிலோமீட்டர் மேற்கு பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தும் முயற்சியாக சிசிடிவி கேமராக்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி 2000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடைய உள்ளது. இந்த பணிகள் ரூ. 40 கோடி செலவில் மத்திய அரசின் உதவியோடு நடைபெறுகிறதது.

இந்நிலையில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக அந்த மாநில காவல் துறை இயக்குனர் கௌரவ் யாதவ் தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டில் முதல் முறையாக 5 கிலோ மீட்டர் இன்டர்நேஷனல் எல்லைக்கு பின்னால் இரண்டாம் நிலை பாதுகாப்பு வரி அமைக்கப்பட்டுள்ளது என்றார்‌.

மேலும் 702 முக்கிய இடங்களில் 2127 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 100 பிடிஎப் கேமராக்கள், 243 ANPR கேமராக்கள், 1700 புல்லட் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தின் ஆலோசனையுடன் இந்த கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

சிசிடிவி கேமராக்கள் மட்டுமின்றி 500 எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தன் மூலம் எல்லை வழியாக பயங்கரவாத ஊடுருவல் மற்றும் போதை பொருள் விற்பனை போன்றவற்றை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.