இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா தொடர்ந்து சொதப்பி வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி உட்பட இந்திய வீரர்கள் ஐவர் தொடர்ந்து ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். நேற்று நடைபெற்ற போட்டியில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது. இதற்கு முன்பு கடந்த 2020-2021 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்தியா 36 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில் அதற்கு அடுத்தபடியாக தற்போது மீண்டும் குறைந்த ரன்களில் அவுட் ஆகியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்தியா குறைந்த ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணியை தற்போது விமர்சித்துள்ளார். அதாவது இந்திய அணி ஆல் அவுட் ஆவதில் முன்னேற்றம் கண்டுள்ளது என்று கூறியுள்ளார். அதன்பிறகு இந்திய ரசிகர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை பாருங்கள். குறைந்தபட்சம் நீங்கள் 36 ரன்கள் தாண்டி விட்டீர்கள். மேலும் இந்திய அணி ஆல் அவுட் ஆவதில் முன்னேற்றம் கண்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் இந்திய ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.