
பொதுவாக நம் அனைவரது வாழ்வில் உப்பு மற்றும் சர்க்கரை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கிறது. சில சமயங்களில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகமாகவது நமக்கு பல்வேறு விதமான வியாதிகளை ஏற்படுத்தலாம். அந்த வகையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் உப்பு மற்றும் சர்க்கரை குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் அந்த பொருள்களில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண் துகள்கள் 0.1mm முதல் 5mm வரை காணப்படுகிறது.
அதாவது டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு Toxic link என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு நடத்திய ஆய்வில் தான் உப்பு மற்றும் சர்க்கரையில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை மக்கள் பயன்படுத்துவதால் மாரடைப்பு, உடல் எடை அதிகரித்தால், நுரையீரல் பாதிப்பு, மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு விதமான வியாதிகள் மனிதர்களுக்கு வர வாய்ப்பு உள்ளது. பொதுவாக இவைகள் அயோடின் உப்பு, கல் உப்பு மற்றும் சர்க்கரையில் இருக்கிறது. மேலும் இது தொடர்பாக அவர்கள் அதிகாரப்பூர்வமாக ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.