கூகுள் பே, போன்பே ஆப் மூலமாக நாம் எளிதில் எங்கிருந்தாலும் பண பரிவர்த்தனையை வீட்டிலிருந்தே செய்ய முடியும். நம்முடைய செல்போனில் இருந்து மற்றவருக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.  இதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதாகவும் உள்ளது. இப்படி தொழில்நுட்பம் அசுரர் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் பே-வை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் பே மூலம் ஆப்பிள் சாதன பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. மற்ற யுபிஐ செயலிகள் எப்படி செயல்படுகிறதோ அது போலவே இதன் இயக்கம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருவதாகசொல்லப்படுகிறது.