
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(42). இவர் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து ள்ளார். நேற்று முன்தினம் வள்ளியூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழ்செல்வன் கடையை சோதனை செய்தனர். அப்போது தமிழ்செல்வன் கடையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழ்செல்வன் கடையை பழவூர் காவல் துறையினர் முன்னிலையில் சீல் வைத்து 25 ஆயிரம் ருபாய் அபராதம் விதித்தனர். மேலும் உணவு பாதுகாப்புத்துறை அளித்த உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.