சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கே உரியது அல்ல, விலங்குகளும் அதை கடைபிடிக்கக்கூடியவை என்பதைக் காட்டுகிறது. ஜூவில் ஒரு சிங்கம், சுற்றுலா பயணிகள் இருவருடன் எப்படி ஒழுங்காக நடந்துகொண்டது என்பதை பதிவு செய்த இந்த வீடியோ, பலரின் மனதையும் தொட்டுள்ளது.

வீடியோவில், ஒருவர் சிங்கத்திற்கு வலையின் கீழ் சிறிது உணவை அளிக்கிறார். சிங்கம் அதை அமைதியாக ஏற்று உண்கிறது. ஆனால், அடுத்த பயணி தனது கைப்பேசியை வலையின் கீழே நுழைத்து செல்ஃபி எடுக்க முயற்சிக்கிறார். இந்த நேரத்தில் சிங்கம், கோபமின்றி, அந்த மனிதரின் கைபேசியைக் கிழிக்காமல் மெதுவாக தள்ளிவைக்கிறது. இது அந்த விலங்கின் பொறுமையும், தனதுபார்வையில் விதிகளை மீறுவது தவறு என்பதையும் வெளிப்படுத்துகிறது.

“Weird Things Caught” என்ற X கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது 2,600-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. “சிங்கம் நட்பாக இருக்கிறது, வயதானதாகத் தெரிகிறது”, “உன் கை இருக்கிறது என்பதே பாக்கியம்” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ, மனிதர்களே விதிகளை மீறும் சூழ்நிலையில், ஒரு சிங்கம் போன்ற விலங்கு ஒழுக்கம் காட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தக் காட்சிகள், நம்மை சிந்திக்க வைக்கும். மனிதர்களாகிய நம்மிடம் இருக்க வேண்டிய பொறுமை, மரியாதை மற்றும் ஒழுக்கம் போன்ற குணங்களை ஒரு விலங்கு உணர்வுடன் கடைபிடிப்பது உண்மையிலேயே கவனிக்கத்தக்கது. இது போன்ற நிகழ்வுகள், சமூக ஒழுக்கம் மற்றும் விதிகளின் முக்கியத்துவத்தை நம்மிடம் மீண்டும் நினைவூட்டுகின்றன.