இண்டர்நெட்டில் பரவியுள்ள வீடியோ ஒன்றில், உலகின் மிகவும் விஷமிக்க கூடிய பாம்புகளில் ஒன்றான ராஜ நாகம் (King Cobra), ஒரு உயரமான மரத்தின் உச்சியில், அமைதியாக அமர்ந்திருப்பது காணப்படுகிறது. இந்தக் காட்சி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mahesh Salve (@_mahesh_salve__)

அடர்ந்த காட்டுப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ, ராஜ நாகத்தின் வலிமையும் நீளமும் எவ்வளவு பயமுறுத்துவதாக இருக்கிறதென பிரதிபலிக்கிறது. பொதுவாக தரையில் ஊர்ந்து செல்லும் இந்த வகை பாம்பு, மரத்தில் இவ்வாறு ஏறுவது மிகவும் அபூர்வமானதென விலங்கியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவைப் பார்த்த பலர், இது நேஷனல் ஜியோகிராஃபிக் தரத்துக்கே உரியது எனக் கூறி கொண்டாடியுள்ளனர். நிபுணர்கள் கூறுவதாவது, இந்த நாகம் பொதுவாக தரையிலேயே வசிக்கும். ஆனால் ஆபத்து ஏற்படும் போதும், இரை தேடிக்கொண்டும் மரத்தில் ஏறும் தன்மை கொண்டது. மரத்தின் படமெடுப்பது அதன் பாதுகாப்பு நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.