
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கண்ணூச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவன் பாடல். இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் பவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தனது காதலியை திருமணம் செய்ய வேண்டும் என அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் கோபத்தில் பூஜா தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கான்பூரில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் பவன் தனது மனைவி இறந்து விட்டதாக கூறி அவருக்கு ஈம சடங்கு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் ஆசைப்பட்டபடி காதலியை திருமணமும் செய்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பவன் பட்டேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.