நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி டாஸ் செய்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணி 20 ஓவர்களில் 218க்கு 5 ரன்கள் குவித்தது. டூப்ளசிஸ் 54, விராட் 47, ரன்களை குவித்தார்கள். அதன்பிறகு 21 ரன்கள் எடுத்ததால் பிளே ஆப் உறுதி செய்துவிடலாம் என்று இலக்கோடு களமிறங்கிய நிலையில் சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது, முதல் பலிலேயே ருதுராஜ் ஆட்டம் இழந்தார்.

கடைசியில் 191 /7 ரன்கள் மட்டுமே குவித்தது. தோனி 25 ரன்னில் அவுட் ஆக ஜடேஜா 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தார். இதனை அடுத்து சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறிய பிறகு பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் தோனியின் கடைசி தொடர் இதுவாகவே இருக்கும் என்று கருத்துக்கள் பரவலாக பேசப்படுகிற நிலையில் அவுட் ஆன பிறகு அவர் கண் கலங்கியபடி அமர்ந்த புகைப்படம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.