
தெற்கு ஆஸ்திரேலியாவின் போர்ட் பிரி பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அடிலெய்டிலிருந்து சுமார் 124 மைல் தொலைவில் உள்ள யங் ஸ்ட்ரீட்டில், மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று ஒரு வீட்டின் முன்பக்கத்தில் வெடிகுண்டுகள் வைத்து தீவைக்க முயன்றது. அவர்கள் அந்த வீட்டை வெடிகுண்டுகளால் தீவைத்ததும், உடனே காரில் ஏறி தப்ப முயன்றதும் பாதுகாப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த கும்பலில் ஒருவர், காரிலிருந்து இறங்கி, இரண்டு தனித்தனி கொள்கலன்களில் இருந்த எரிபொருளை வீட்டு முன்புறம் மற்றும் நடைபாதையில் ஊற்றுகிறார். பின்னர் காரில் மீண்டும் ஏறியதும், வாகனம் நகரத் தொடங்கியதும், திடீரென வாகனத்தின் உள்ளே தீப்பிழம்புகள் உருவாக, மூவரும் தாங்களே தீக்கிரையாகும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் உடனே இருபுறமும் காரிலிருந்து பாய்ந்து வெளியில் ஓடிச் சென்றனர். பின்னர், அந்தக் காரை தெருவில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
NEW: Would-be arsonists set themselves on fire inside their own getaway vehicle while trying to set a fenced-off building on fire.
Instant karma.
According to police, the group was forced to abandon the vehicle, which was still on fire when they arrived.
“It is extremely… pic.twitter.com/BkGgXV7vOF
— Collin Rugg (@CollinRugg) June 21, 2025
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் போலீஸ் படையினர் தீயை கட்டுப்படுத்தினர். காரும், வீட்டின் வெளிப்புறமும் தீக்கிரையாகி சேதமடைந்தது. அதிர்ச்சியாக, வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தீக்காயம் அடைந்திருக்கக்கூடும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எந்தவொரு தகவலும் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சமூக பாதுகாப்பைக் காக்கும் நோக்கில், குற்றவாளிகளை விரைவில் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.