ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்ற நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

தோல்வி பயத்தால் திமுக அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக வெளிப்படையாக மத்திய பார்வையாளர்களின் கண்களில் படும்படியாக வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதின் மூலம் இடைத்தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.