மக்களவைத் தேர்தலில் 30 தொகுதிகளில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் களமிறங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சரத்குமாரின் ச.ம.க ஆகியவையுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் பெயர்களும் பேச்சுவார்த்தையில் அடிபடுகிறது. இந்நிலையில் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் 5 சிறிய காட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிகிறது.