இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரி போன்ற அனைத்து தகவல்களையும் இலவசமாக மாற்ற மார்ச் 14ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணையதளத்தில் நீங்கள் இந்த சேவையை இலவசமாக பெற முடியும். ஆதார் அட்டையை புதுப்பிக்க https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்