கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் இதுவரை 2.67 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் இணைத்துள்ளனர்.

மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதனால் இலவச மின் திட்டங்கள் ரத்தாகும் என்ற பயம் இனி தேவை இல்லை. அதே போல் விவசாயம், கைத்தறி, நெசவாளர்கள், குடிசைகள் மற்றும் விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மின்துறையை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு ரூ.9,048 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அது இந்த வருடம் கூடுதலாக  ரூ.4,000 மானியத்தை தமிழக அரசு வழங்க உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.