மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது 18 முதல் 50 வயதுடைய இந்தியர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். அதன்படி பாலிசிதாரர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

தகுதியான நபர் ஆண்டுக்கு ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இது குறித்து தங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்திற்குச் சென்று PMJJBY பாலிசியை பெறலாம்.