கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் 37 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் தன் வீட்டை வாடகைக்கு விட்ட நிலையில் அதில் ரவுடி சுரேஷ் தங்கி இருந்தார். இவர் தன்னை ஒரு ஆட்டோ ஓட்டுனர் எனக் கூறிய வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். இதில் சுரேஷ் மற்றும் அந்தப் பெண் இருவருக்கும் பழக்கம் ஏற்பட நாளடைவில் கள்ள உறவாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் திடீரென அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் கோபத்தில் சுரேஷ் அந்தப் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டினார். இந்நிலையில் திடீரென அந்த பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த பெண் விசாரித்த நிலையில் அவர் ஒரு ரவுடி என்பதும் ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்ததும் தெரிய வந்த நிலையில் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.