
கேரள மாநிலம் உடுப்பியை சேர்ந்த 28 வயது இளைஞர் சஞ்சய் கர்கேரா. இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருடன் நண்பராக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் தினமும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சஞ்சய் அந்த இளம் பெண்ணை கல்லசே என்ற மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என சஞ்சய் ஆசை வார்த்தைகள் கூறியதால் அவரை இளம்பெண் அதனை நம்பியுள்ளார்.
பின்பு அங்கு வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சஞ்சய் அந்தப் பெண்ணிடம் அடிக்கடி பாலியல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சஞ்சயை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் சஞ்சய் அந்தப் பெண்னை திருமணம் செய்ய மறுத்துள்ளார். எனவே பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சய் கர்கேராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.