
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து கட்சியின் உறுப்பினர்களும் வரவேற்பு கொடுத்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதாவது மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர்களின் அலட்சியத்தால் தான் தற்போது மதுரையில் சுரங்கம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் கண்டிப்பாக சுரங்கம் அமையாது என்று ஒரு வேலை அப்படி அமைந்தால் நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என்றும் கூறினார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அதிமுக கட்சியின் எம் பி தம்பிதுரை அந்த மசோதாவுக்கு ஆதரவாக பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சுரங்கம் மற்றும் கனிம திருத்த சட்டத்திற்கு எதிராக பேசும் தெரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு சட்டசபையில் தமிழ்நாட்டின் நகனுக்கு ஆதரவாக பேசுவது போல் நடிக்கிறார். அவதூறுகளை பரப்பி உயிர் வாழும் அவர் அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாக திகழ்கிறார்.
சட்டப்பேரவையில் சொன்னதை தற்போதும் சொல்கிறேன் கண்டிப்பாக தமிழக அரசு அப்படி ஊறு விளைவிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி வழங்காது என்று கூறினார். இதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தம்பிதுரை சுரங்கம் தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவர் நாடாளுமன்றத்தில் எந்தவித கருத்தையும் தெரிவிக்காத நிலையில் டங்ஸ்டன் விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் உண்மையை மறைத்து பேசுவதா.? தேவையில்லாமல் என் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார் என்று கூறியுள்ளார்.
சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.… pic.twitter.com/V1riWfa03l
— M.K.Stalin (@mkstalin) December 9, 2024