அமெரிக்காவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் முன்னணி விமான நிறுவனம் தான் அமெரிக்கன் ஏர்லைன்ஸ். நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் திடீரென தரையிறக்கப்பட்டன.

கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இத்தகைய அவசர முடிவு எடுக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஆனால் இரண்டு மணி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து 6 மணிக்கு தொடங்க வேண்டிய விமான சேவை காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கியது.