
பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்வது இல்லை, ஆனால் தகவல் தந்து விட்டோம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள், எந்த ஒரு பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை எனவும் ஏனென்றால் அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கிறார்கள் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் குற்றம் சாட்டி இருந்த நிலையில் கனிமொழி தற்போது மாநிலங்களவையில் இவ்வாறு பேசியுள்ளார்.