திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சிந்தியா(65). இந்த தம்பதியினருக்கு சாந்தகுமார், விஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

சிந்தியா வீட்டிற்கு அருகிலேயே மூத்த மகன் சாந்தகுமாரின் மனைவி அருட்செல்வி தனது பிள்ளைகள், தாய், தந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி சிந்தியா தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிந்தியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்ற சென்றனர்.

இதுகுறித்து சிந்தியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மருமகள் அருட்செல்வி(40), பேரன் அருண்குமார்(19), அருட்செல்வியின் தந்தை அய்யாதுரை(65) மூன்று பேரும் சேர்ந்து தங்க சங்கிலியை பரித்து சென்றது தெரியவந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்து தங்க சங்கிலியை மீட்டனர்.