
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பூமத்திய ரேகை ஒட்டி இருக்கும் இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, பொங்கல் பண்டிகை வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை விலகும். 2024 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 33 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது என கூறியுள்ளார்.