இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகக் கௌதம் கம்பீர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் முன்வைத்துள்ள விமர்சனங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கம்பீரின் பயிற்சியாளர் பணியை வெறும் 10-க்கு 4 புள்ளிகள் மட்டுமே தகுதியுடையதாகக் குறிப்பிட்டுள்ள கைஃப், வீரர்களுடனான உரையாடலில் அவர் சுணக்கம் காட்டுவதாகவும், குறிப்பாக விராட் கோலிக்கும் கம்பீருக்கும் இடையே வெளிப்படைத்தன்மை குறைந்து ஒரு இடைவெளி நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
🚨Mohammad Kaif gives Gautam Gambhir just 4/10 as India’s head coach. 😳
Kaif said a coach’s biggest responsibility isn’t just winning matches, it’s maintaining communication and transparency within the dressing room.
He added that players deserve to know why they’re dropped,… pic.twitter.com/BAFTpvQsni
— Mention Cricket (@MentionCricket) July 15, 2026
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற பயிற்சி அமர்வின்போது ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்களுடன் கம்பீர் உரையாடிய நிலையில், விராட் கோலியுடன் அவர் பேசக்கூட இல்லை என்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தலைமை பயிற்சியாளரின் முக்கியப் பணி வெற்றி பெறுவது மட்டுமல்ல, வீரர்களிடையே ஒரு நல்லுறவைப் பேணுவதும், அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்கமாகத் தெரிவிப்பதும்தான் என்று கைஃப் அறிவுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் 2027 உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமானால், சீனியர் வீரர்களுடன் கம்பீர் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தேவைப்பட்டால் வீரர்களின் அறைக்கே சென்று மனம் விட்டுப் பேசி சரி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய மோதல் போக்கு இந்திய அணிக்கு நல்லதல்ல என்று எச்சரித்துள்ள கைஃப், பயிற்சியாளருக்கும் நட்சத்திர வீரர்களுக்கும் இடையேயான இந்த மௌனப் போர் ஒட்டுமொத்த அணியின் மன உறுதியையும் பாதிக்கலாம் எனக் கவலை தெரிவித்துள்ளார்.
