விடைத்தாள்களை பேராசிரியர் ஒருவர் அலட்சியமாக திருத்துவது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகாரில் உள்ள பாடலிபுத்ரா பல்கலைக்கழக தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெறுகின்றது. அதில் பேராசிரியை ஒருவர் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை படித்துப் பார்க்காமல் அப்படியே திருத்துகின்றார். பிறகு விடைத்தாள் பக்கங்களை புரட்டி சரிபார்த்தவாறு மதிப்பெண்களை வாரி வழங்குகிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தின் வைரலாகி வரும் நிலையில், பேராசிரியை மதிப்பெண் வழங்கும் விதைத்தாள்களுக்கு உரிய மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சியமாக ஈடுபட்ட பேராசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.