கன்னியாகுமரி மாவட்டம் புங்கறை ஆலுவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாகமணி. இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் நீண்ட நேரமாக செல்போன் உபயோகப்படுத்தியதால் மணிகண்டனின் தாய் தனது மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.