நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு கொலைகளை தலைநகரமாகும் கொங்கு மண்டலமே சாட்சி. கொங்கு மாவட்ட தோட்ட வீடுகளில் முதியவர்கள் தொடர் படுகொலை அன்றாட நிகழ்வாகிவிட்டது.

ஒரே இடங்களில் ஒரே மாதிரியான படுகொலைகள் ஒரே வகையில் நடக்கும் போதும் தடுக்க முடியவில்லை. முதியவர்கள், பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் வெளியில் மட்டுமல்ல வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுவது சட்டம் ஒழுங்கு சீரழிவு மிக மோசமான நிலை. அரசையோ போலீசாரையோ நம்பி பயனில்லை.

திமுக ஆட்சியில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. மீதமிருக்கும் ஓராண்டு ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூர கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை தமிழக மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.

திமுக ஆட்சி என்றாலே ரத்த வெள்ளத்தில் மக்கள் மிதக்கும் காட்சி தான் அனைவரின் நினைவுகளுக்கும் வரும். அந்த அளவுக்கு படுகொலைகள் தங்கு தடை இன்றி தொடர்ந்த அரங்கேறுகிறது. திமுக ஆட்சியை அகற்றி மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்லாட்சியை மலர செய்வது ஒன்றே ஒற்றை வாய்ப்பு, தீர்வுமாகும் என சீமான் கூறியுள்ளார்.