நாடு முழுவதும் மாத சம்பளம் பெரும்  ஊழியர்கள் வருடத்திற்கு 5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெற்றால் வருமான வரி செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதாவது மொத்த வருமானத்திலிருந்து வீட்டு வாடகை, நன்கொடை போன்ற செலவுகள் கழிக்கப்பட்டு வருட சம்பளம் 5 லட்சத்திற்கும் மேலிருந்தால் மட்டுமே வருமான வரி கட்டாயமாக செலுத்த வேண்டும். இருப்பினும் பல்வேறு ஊழியர்கள் வருமான வரி செலுத்தக்கூடாது என்பதற்காக போலியான வீட்டு வாடகை ஒப்படைத்ததாக புகார் எழுந்து வந்தது.

இந்த நிலையில் போலியான ஆவணங்களை கண்டுபிடிக்க வருமான வரித்துறை புதிய சாப்ட்வேர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாப்ட்வேர் மூலமாக ஊழியர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் உண்மையானதா அல்லது போலியானதா என்று கண்டுபிடித்து விடலாம். ஒருவேளை ஊழியர் ஒப்படைத்த ஆவணம் போலியாக இருந்தால் அவருக்கு 20% முதல் கட்டமாக அபராதம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாப்ட்வேர் அமல்படுத்தப்பட்ட பிறகு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியாது.